Category Archives: அஜீரணம்

நோயும் மருந்தும்

1. நெஞ்சு சளி
**************
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
***************
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
***8********************
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
***8***************
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
**************
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயுத் தொல்லை
*******8**************
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
******8**********
வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
*****8**********
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
*****8***********
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
******************************
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
***********8*********
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
******8********
புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
*******8********
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
*******8*******
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து, தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
***************************
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

மருத்துவப் புது மொழி


* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

உடலுக்குத் தேவை

இளமை தங்க நெல்லிக்கனி
இதயம் வலுப்பட செம்பருத்திப் பூ
மூட்டு வலி முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு கற்பூரவல்லி ஓமவல்லி
நீரழிவு அரைக்கீரை, வில்வம்
வாய்ப்புண், குடல்புண் மணத்தக்காளிகீரை
உடல் பொன்னிறமாக பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல்
ரத்த அழுத்தம் துளசி, பசலைக்கீரை
ரத்த சோகை பீட்ரூட்
புற்று நோய் சீதா பழம்
மூளை வலிமை பப்பாளி பழம்
நீரிழிவு முள்ளங்கி
வாயுத் தொல்லை வெந்தயக் கீரை
மார்பு சளி, இருமல் சுண்டைக்காய், தூதுவளை
சளி, ஆஸ்துமா ஆடாதொடை.
ஞாபகசக்தி வல்லாரை கீரை
அஜீரணம் அன்னாசி பழம், புதினா
முடி நரை கல்யாண முருங்கை முள் முருங்கை
கண்பார்வை கூட கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
மஞ்சள் காமாலை கீழாநெல்லி
சிறுநீரக கல் வாழைத்தண்டு

அஜீரணம்

நன்றி:  விஜயகுமார் சு shared Baskar Jayaraman‘s post.

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து !

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

இரைப்­பையின் கீழ்ப்­ப­கு­தியில் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள் பல்­வேறு மடிப்பு நிலையில் காணப்­படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்­கு­மாக சூழ்ந்திருக்கும்.

அந்த தசை­களின் உத­வியால், இரைப்­பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்­கப்­படும். இரைப்­பையில் இருந்து வெளி­யாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரை­யாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்­ச­மாக சிறு­கு­ட­லுக்குள் தள்­ளப்­படும். அங்­குதான் உணவு முற்­றிலும் ஜீர­ண­மா­கி­றது.

உணவில் இருக்கும் புரதம், சர்க்­கரை மாவு, நிணநீர் போன்­றவை சிறு­கு­ட­லினால் ஜீர­ணிக்­கப்­பட்டு, அவை குடல் உறிஞ்­சி­களால் ரத்­தத்­துக்குள் செலுத்­தப்­ப­டு­கின்­றன.

இதற்­கென்று கணை­யத்தில் தக்க அமி­லங்கள் சுரக்­கின்­றன. சிறு­கு­டலின் தொடக்­கத்தில் இட­து­பு­ற­மாக கணையம் இருக்­கி­றது. கல்­லீரல் பித்­தத்தை சுரக்­கி­றது.

கணை­யத்­துக்கு ரத்தம் செல்­லும்­போது, இச்­சு­ரப்பு கணை­யத்தை சுரக்கச் செய்­கி­றது. இந்த சுரப்­புகள் ‘என்சைம்’ எனப்­படும் வேதிப்­பொ­ரு­ளாகும்.

என்­சைம்­க­ளா­லேயே நம் உடலில் ஜீரணம் நடை­பெ­று­கி­றது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறு­கு­டலின் சவ்வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்­பதால், குட­லுக்கு பல­ம­டங்கு உணவு சத்­துக்கள் கிடைக்­கின்­றன.

இதில் செல்லும் உண­வா­னது ஜீர­ண­மாகி, கல்­லீ­ரலில் சத்­தான அமி­லங்­க­ளாக சேமிக்­கப்­ப­டு­கின்­றன.மிகு­தி­யாக உள்­ளவை, ரத்­தத்தின் கல­வை­யாக மற்ற உறுப்­பு­க­ளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்­துக்கள் நீங்­கிய திப்பிகள் பெருங்­கு­ட­லுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.

மலத்­துக்கு ஈரம் கொடுப்­ப­தற்கு வேண்­டிய அளவு போக, மிகு­தி­யான நீர்ப்­ப­குதி ரத்­தத்தில் நீக்­கப்­படும்.மேலும் கடி­ன­மான கழி­வுகள், பித்தம், பாக்­டீ­ரியா என்னும் நுண்­ணு­யிர்கள் எல்லாம் சளி­யோடு சேர்ந்து, பெருங்­கு­டலில் உள்ள தசை­களால் ஆச­னத்­துக்குள் தள்­ளப்­படும்.

இது, பொது­வாக நடை­பெறும் உணவு செரி­மா­ன­மாகும். மேற்­கூ­றிய உறுப்­பு­களில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரி­மானம் ஆவதில் குள­று­படி ஏற்­படும்.

ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உட­லுக்கு சக்தி தரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

நாக்கு ருசிக்­காக அடிக்­கடி சாப்­பி­டாமல், பசித்­தபின் உண­வ­ருந்த வேண்டும். அதி­க­ளவு உணவு, அடிக்­கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாச் சத்து உண­வு­களை அதிகம் சேர்ப்­பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உணவு­களை நிறைய சாப்­பி­டு­வதால் நமக்கு ஜீரண கோளா­றுகள் வரலாம்.

stomack

 

ஜீரண கோளாறை தடுப்­பது எப்­படி?

நம் அன்­றாட வாழ்க்­கையில் இத்­த­கைய இடர்­பா­டு­களை களைய, ஏரா­ள­மான கை வைத்­தி­யங்கள் உள்­ளன.

1. ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

2. திராட்டை பழத்தின் கொட்­டையை நீக்­கி­விட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்­கலாம். கொய்யா மரத்தின் கொழுந்து இலை­களைப் பறித்து சாப்­பி­டலாம்.

கொத்­த­மல்லி விதையை வறுத்து சாப்­பிட்டால், ஜீர­ண­மா­காமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்­ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முத­லி­ய­வற்றை 100 கிராம் எடுத்து, இவற்­றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்­துடன் கலந்து சாப்­பி­டலாம்.

ஒரு பங்கு வசம்­புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷா­ய­மாக வடி­கட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும்.

ஒரு துண்டு இஞ்­சியை நன்­றாக அரைத்து, ஒரு டம்ளர் எலு­மிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடி­கட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

சுக்கு, இல­வங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்­றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!

‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழலாம்.