Tag Archives: பரங்கிப்பட்டை

குட்டங்கள்

கடுகு, திரிபலை, சாரணைவேர், ஊழாத்திப்பட்டை, அமுக்கராங்கிழங்கு, பிறப்பங்கிழங்கு, நறுக்குமூலம், தூதுவளைவேர், சிறுதேக்கு, ஓமம், வாய்விளங்கம், செவியம், சீரகம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, பூலாங்கிழங்கு, ஆனைதிப்பிலி, சங்கம்பட்டை வகைக்குப் பலம் ஒன்று. இவற்றை ஆற்று வெள்ளத் தண்ணீரிலிட்டு ஐந்து நாள் ஊறவைத்து பிழிந்த கிஷாயத்தில், வெள்ளெருக்கின் சாறு, கரிப்பான் சாறு, ஆயில்சாறு, மேற்படி பட்டைச்சாறு சேர்த்து அதில் பரங்கிப்பட்டை, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு விராகன் மூன்று, இவற்றை இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் கலக்கி தலை மயிர், குடல் நீக்கிய கோழிக்குள் வைத்துக்கட்டி தோலாயந்திரங்கட்டித் தொங்கவிட்டு மூடி, தீபாக்கினியாக முப்பது நாழிகை எரித்து இரண்டுபடி கிஷாயமி

ருக்கையில் இறக்கி, கோழியை எடுத்து எலும்பு நீக்கி, உலர்த்திச் சூரணித்து, வெருகடி அளவு தேனில் இருபத்தைந்து நாள் உட்கொள்ள குஷ்டம், சூலை நோய் தீரும்.

கிரந்தி, சூலை, கைகால் முடக்கு

சுத்தித்த குக்கில், சுத்தித்த பரங்கிப்பட்டை வகைக்கு பலம் ஆறு, சுத்தித்த கந்தகம் பலம் ஒன்று சேர்த்து சூரணம் செய்யவும். இதனில் ஒரு சிட்டிகை காலை மாலை சாப்பிடவும்.