Tag Archives: கருஞ்சீரகம்

குட்டங்கள்

கடுகு, திரிபலை, சாரணைவேர், ஊழாத்திப்பட்டை, அமுக்கராங்கிழங்கு, பிறப்பங்கிழங்கு, நறுக்குமூலம், தூதுவளைவேர், சிறுதேக்கு, ஓமம், வாய்விளங்கம், செவியம், சீரகம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, பூலாங்கிழங்கு, ஆனைதிப்பிலி, சங்கம்பட்டை வகைக்குப் பலம் ஒன்று. இவற்றை ஆற்று வெள்ளத் தண்ணீரிலிட்டு ஐந்து நாள் ஊறவைத்து பிழிந்த கிஷாயத்தில், வெள்ளெருக்கின் சாறு, கரிப்பான் சாறு, ஆயில்சாறு, மேற்படி பட்டைச்சாறு சேர்த்து அதில் பரங்கிப்பட்டை, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு விராகன் மூன்று, இவற்றை இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் கலக்கி தலை மயிர், குடல் நீக்கிய கோழிக்குள் வைத்துக்கட்டி தோலாயந்திரங்கட்டித் தொங்கவிட்டு மூடி, தீபாக்கினியாக முப்பது நாழிகை எரித்து இரண்டுபடி கிஷாயமி

ருக்கையில் இறக்கி, கோழியை எடுத்து எலும்பு நீக்கி, உலர்த்திச் சூரணித்து, வெருகடி அளவு தேனில் இருபத்தைந்து நாள் உட்கொள்ள குஷ்டம், சூலை நோய் தீரும்.

ஆராத புண்

இரசம், காரீயம், மிளகு, கடுகு, கருங்குங்கிலியம் எருக்கு கரி வகைக்கு பலம் மூன்று, துத்தம், வெள்ளைப் பாசாணம், கந்தகம் வகைக்குப் பலம் ஒன்று இவைகளைப் பொடித்துப் புண்களுக்குப் புகை போடவும்.

இதுவும் அது:
பருத்தி இலை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, தவசி முருங்கைவேர், நாயுருவிவேர், கிளுவைவேர், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி, வெள்ளை வெங்காயம், சிறுகீரைவேர் ஓர் அளவு கூட்டி இடித்து நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி புரையோடு புண்களுக்கு சீலையில் நனைத்து வைக்கவும். வாய் விரிந்த புண்ணுக்கு எண்ணையைப் பஞ்சில் நனைத்துப் போடவும்.
உள்வினையற விழும்பிச் சாறு சேர்த்துச் சாப்பிடவும். புளிம்பிரண்டை, சமூலமிடித்து களிகிண்டி நல்லெண்ணை வெல்லம் சேர்த்து உண்ணவும். கருஞ்சூரைப் பட்டையை இடித்து வீக்கத்திற்கு வைத்துக் கட்டவும்.