ஆராத புண்

இரசம், காரீயம், மிளகு, கடுகு, கருங்குங்கிலியம் எருக்கு கரி வகைக்கு பலம் மூன்று, துத்தம், வெள்ளைப் பாசாணம், கந்தகம் வகைக்குப் பலம் ஒன்று இவைகளைப் பொடித்துப் புண்களுக்குப் புகை போடவும்.

இதுவும் அது:
பருத்தி இலை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, தவசி முருங்கைவேர், நாயுருவிவேர், கிளுவைவேர், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி, வெள்ளை வெங்காயம், சிறுகீரைவேர் ஓர் அளவு கூட்டி இடித்து நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி புரையோடு புண்களுக்கு சீலையில் நனைத்து வைக்கவும். வாய் விரிந்த புண்ணுக்கு எண்ணையைப் பஞ்சில் நனைத்துப் போடவும்.
உள்வினையற விழும்பிச் சாறு சேர்த்துச் சாப்பிடவும். புளிம்பிரண்டை, சமூலமிடித்து களிகிண்டி நல்லெண்ணை வெல்லம் சேர்த்து உண்ணவும். கருஞ்சூரைப் பட்டையை இடித்து வீக்கத்திற்கு வைத்துக் கட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *