Tag Archives: கடுகு

சூலைப் புண்

கந்தகம் விராகனிடை ஐந்து, வெள்ளைக் குங்கிலியம் விரகனிடை பத்து, பொடித்து, பத்து குன்றியிடை வெள்ளீயத்தை உருக்கி அதில் இரசம் மூன்று விராகன் விட்டுக்கிண்டி எடுத்துப் பொடித்து, மேற்கூறிய இரண்டையும் சேர்த்து அரைத்து, ஆறு பங்கு செய்து மூன்று நாள் ஆறுவேளை புகை போடவும். பத்தியம் கொள்ளவும். நாங்கு நாட்களுக்கு ஒரு முறை தலை முழுகுதல் வேண்டும். இரண்டு மணி நேரம் தண்ணீரில் குளித்தல் நன்று.

இது வேறு;
காரீயம், இரசம் விராகன் முக்கால், துத்தம், துரிசு, வெள்ளைப் பாஷாணம், மிளகு, கடுகு விராகன் பதிமூன்று, கருங்குங்கிலியம் பணவிடை பதினாறு, அரிதாரம் பணவிடை ஐந்து, கவுரிபாஷாணம் விராகன் ஐந்து, மேற்படி காரீயத்தை உருக்கி இரசத்தை விட்டு முரித்து எடுத்து மற்றவைகளையும் சேர்த்து பருத்தி இலைச்சாறு, கையாந்தகரைச் சாறு, ஊமத்த இலைச்சாறு, வேலிப்பருத்தி இலைச்சாறு, இவைகளில் ஒவ்வொரு சாற்றிலும் ஒவ்வொரு நாழிகை அரைத்து ஒன்பது பாகமாகக்கொண்டு புகை போடவும்.
பத்தியம்:- பழஞ்சோறு, உப்பு, வெங்காயம், விளக்கெண்ணை. தண்ணீரில் முழுகவும்.
முறிவு:- வெல்லம்

குட்டங்கள்

கடுகு, திரிபலை, சாரணைவேர், ஊழாத்திப்பட்டை, அமுக்கராங்கிழங்கு, பிறப்பங்கிழங்கு, நறுக்குமூலம், தூதுவளைவேர், சிறுதேக்கு, ஓமம், வாய்விளங்கம், செவியம், சீரகம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, பூலாங்கிழங்கு, ஆனைதிப்பிலி, சங்கம்பட்டை வகைக்குப் பலம் ஒன்று. இவற்றை ஆற்று வெள்ளத் தண்ணீரிலிட்டு ஐந்து நாள் ஊறவைத்து பிழிந்த கிஷாயத்தில், வெள்ளெருக்கின் சாறு, கரிப்பான் சாறு, ஆயில்சாறு, மேற்படி பட்டைச்சாறு சேர்த்து அதில் பரங்கிப்பட்டை, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு விராகன் மூன்று, இவற்றை இளவறுப்பாக வறுத்து சூரணித்துக் கலக்கி தலை மயிர், குடல் நீக்கிய கோழிக்குள் வைத்துக்கட்டி தோலாயந்திரங்கட்டித் தொங்கவிட்டு மூடி, தீபாக்கினியாக முப்பது நாழிகை எரித்து இரண்டுபடி கிஷாயமி

ருக்கையில் இறக்கி, கோழியை எடுத்து எலும்பு நீக்கி, உலர்த்திச் சூரணித்து, வெருகடி அளவு தேனில் இருபத்தைந்து நாள் உட்கொள்ள குஷ்டம், சூலை நோய் தீரும்.

ஆராத புண்

இரசம், காரீயம், மிளகு, கடுகு, கருங்குங்கிலியம் எருக்கு கரி வகைக்கு பலம் மூன்று, துத்தம், வெள்ளைப் பாசாணம், கந்தகம் வகைக்குப் பலம் ஒன்று இவைகளைப் பொடித்துப் புண்களுக்குப் புகை போடவும்.

இதுவும் அது:
பருத்தி இலை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, தவசி முருங்கைவேர், நாயுருவிவேர், கிளுவைவேர், கருஞ்சீரகம், ஓமம், சுக்கு, திப்பிலி, வெள்ளை வெங்காயம், சிறுகீரைவேர் ஓர் அளவு கூட்டி இடித்து நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி புரையோடு புண்களுக்கு சீலையில் நனைத்து வைக்கவும். வாய் விரிந்த புண்ணுக்கு எண்ணையைப் பஞ்சில் நனைத்துப் போடவும்.
உள்வினையற விழும்பிச் சாறு சேர்த்துச் சாப்பிடவும். புளிம்பிரண்டை, சமூலமிடித்து களிகிண்டி நல்லெண்ணை வெல்லம் சேர்த்து உண்ணவும். கருஞ்சூரைப் பட்டையை இடித்து வீக்கத்திற்கு வைத்துக் கட்டவும்.

கண்டமாலை

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன.

புங்கம்வேர், ஆயில்பட்டை, தூதுவளைவேர், கழற்சிவேர், வெள்ளறுகு, நிலஆவரைவேர், சங்கங்குப்பிவேர், அவிரிவேர், சுக்கு, மிளகு, அப்பக்கோவைக் கிழங்கு, வெள்வெங்காயம், கருங்குங்கிலியம், வாய்விளங்கம், கடுகு, வெந்தயம், திப்பிலி மூலம், கண்டுபரங்கி வகைக்கு பலம் ஒன்று, சிற்றரத்தை பலம் 5, திப்பிலி பலம் 8 இவைகளை இடித்து, 3பட் நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி கடுகு பதத்தில் வடித்து இரண்டு விராகனிடை காலை மாலை உட்கொள்ளவும். பத்தியம் காக்கவும்.

இதுவுமது:

அரிதாரத்தை நீல நிறமாகச் சுட்டு நீரில் அரைத்து சிலையிலூட்டி திரியேற்றப் புண்ணும், சீழும் மாறும்.
கழலை அரையாமல் புண்ணாகாமல் கட்டியாக இருந்தால் அந்தக் கழலையை அறுத்து திரி போடவும்.
மூன்று அல்லது நான்கு நாள் சென்றபின் செம்புண்ணானால் வெள்ளைக் குங்கிலியம், படிகாரம், மயில் துத்தம், பொன்மெழுகு வகைக்கு விரகன் ஒன்று பொடித்து சிறிது நல்லெண்ணையிட்டுக் காய்ச்சி தண்ணீரில் விட்டு எடுத்து வெங்கல வட்டிலில் போட்டு செம்புக்குவளையால் அரைத்து களிம்பு செய்து துணியில் தடவிப் புண்ணுக்குப் போடவும். மறு நாள் புளியந்தழை அவித்த தண்ணீரில் கழுவவும்.

நோயும் மருந்தும்

1. நெஞ்சு சளி
**************
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆறவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
***************
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
***8********************
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
***8***************
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
**************
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயுத் தொல்லை
*******8**************
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
******8**********
வெந்தயத்தை நெய்யில் வறுத்துப் பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
*****8**********
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
*****8***********
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
******************************
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
***********8*********
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
******8********
புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
*******8********
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
*******8*******
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து, தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
***************************
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.