கண்டமாலை

தைராயிடு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராயிடு சுரப்பியின் வீக்கத்தால் கழுத்தும் குரல்வளையும் வீக்கம் அடைகின்றன.

புங்கம்வேர், ஆயில்பட்டை, தூதுவளைவேர், கழற்சிவேர், வெள்ளறுகு, நிலஆவரைவேர், சங்கங்குப்பிவேர், அவிரிவேர், சுக்கு, மிளகு, அப்பக்கோவைக் கிழங்கு, வெள்வெங்காயம், கருங்குங்கிலியம், வாய்விளங்கம், கடுகு, வெந்தயம், திப்பிலி மூலம், கண்டுபரங்கி வகைக்கு பலம் ஒன்று, சிற்றரத்தை பலம் 5, திப்பிலி பலம் 8 இவைகளை இடித்து, 3பட் நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி கடுகு பதத்தில் வடித்து இரண்டு விராகனிடை காலை மாலை உட்கொள்ளவும். பத்தியம் காக்கவும்.

இதுவுமது:

அரிதாரத்தை நீல நிறமாகச் சுட்டு நீரில் அரைத்து சிலையிலூட்டி திரியேற்றப் புண்ணும், சீழும் மாறும்.
கழலை அரையாமல் புண்ணாகாமல் கட்டியாக இருந்தால் அந்தக் கழலையை அறுத்து திரி போடவும்.
மூன்று அல்லது நான்கு நாள் சென்றபின் செம்புண்ணானால் வெள்ளைக் குங்கிலியம், படிகாரம், மயில் துத்தம், பொன்மெழுகு வகைக்கு விரகன் ஒன்று பொடித்து சிறிது நல்லெண்ணையிட்டுக் காய்ச்சி தண்ணீரில் விட்டு எடுத்து வெங்கல வட்டிலில் போட்டு செம்புக்குவளையால் அரைத்து களிம்பு செய்து துணியில் தடவிப் புண்ணுக்குப் போடவும். மறு நாள் புளியந்தழை அவித்த தண்ணீரில் கழுவவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *