Category Archives: கல்லீரல்

அதிமதுரம்

புகை பிடிக்க தூண்டும் உணர்வை மறக்கடிக்கும். இந்த மூலிகையைச் சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்!

அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் இரத்தம் நிற்கும்.

அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

அதிமதுர வேர்ப்பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்து வர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

பொதுவாக அதிமதுரம் ஒரு ‘நிதானமான’மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

இன்னும் எத்தனைஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான்மருந்து. புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது. ஒருதடவை சொன்னா சொன்னதுதான்.
இந்த பாடலை ஒவ்வொருவரும் எழுதிவைத்து கொள்ளுங்கள். எக்காலத்திலும் உதவும்.

இப்பாடல் அருந்தமிழ்மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கழுதைப் பால்

இந்த பாலை அருந்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. அப்படின்னா எதுக்கு இம்புட்டு சொல்லுகிறீர்கள்?

கழுதைப் பால் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கிறது. புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கு இது உதவுகிறது.

புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது. இந்த ஒரு பொருளே போதும் புற்று நோயை விரட்டியடிக்க.

கழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன. மேலும் கழுதைப் பால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பிரான்ஸ் நாட்டின் முதல் அரசரான பிரான்ஸிஸ் போரில் அதிருப்தியால் சோர்வடைந்த போது மருத்துவரின் ஆலோசனை பேரில் கழுதைப் பால் தான் குடித்து வந்தார். அது அவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. எனவே அறிவியல் பூர்வமாக கழுதைப் பால் ஒரு மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும்.

கல்லீரல் நச்சு:

இந்த பாலை ஆராய்ச்சி செய்த போது இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மற்ற காலை காட்டிலும் கழுதைப் பால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும்.

சரும பிரச்சினைகள்:

உங்களுக்கு பருக்கள் தொல்லை இருந்தால் அதற்கு கழுதைப் பால் சிறந்தது. உங்கள் சரும பிரச்சினைகளை துல்லியமாக போக்கி புதுப்பிக்க இது ஒரு சிறந்த மருந்து. அப்புறம் என்ன பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பரிசாக பெறலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்:

இந்த பால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நோய்களை எதிர்த்து போராடி அதை குணப்படுத்த உதவுகிறது.

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

இந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களுக்கு உதவுகிறது. இது மூளைக்கு சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

உங்களுக்கு என்ன நோய்?

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

4. கண்கள் உலர்ந்து போவது. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

மருத்துவப் புது மொழி


* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

உடலுக்குத் தேவை

இளமை தங்க நெல்லிக்கனி
இதயம் வலுப்பட செம்பருத்திப் பூ
மூட்டு வலி முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு கற்பூரவல்லி ஓமவல்லி
நீரழிவு அரைக்கீரை, வில்வம்
வாய்ப்புண், குடல்புண் மணத்தக்காளிகீரை
உடல் பொன்னிறமாக பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல்
ரத்த அழுத்தம் துளசி, பசலைக்கீரை
ரத்த சோகை பீட்ரூட்
புற்று நோய் சீதா பழம்
மூளை வலிமை பப்பாளி பழம்
நீரிழிவு முள்ளங்கி
வாயுத் தொல்லை வெந்தயக் கீரை
மார்பு சளி, இருமல் சுண்டைக்காய், தூதுவளை
சளி, ஆஸ்துமா ஆடாதொடை.
ஞாபகசக்தி வல்லாரை கீரை
அஜீரணம் அன்னாசி பழம், புதினா
முடி நரை கல்யாண முருங்கை முள் முருங்கை
கண்பார்வை கூட கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
மஞ்சள் காமாலை கீழாநெல்லி
சிறுநீரக கல் வாழைத்தண்டு