Category Archives: புற்று நோய்

நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது.

சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிடவேண்டும். அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வரவேண்டும்.

நீரிழிவு கட்டுபட நித்திய கல்யாணி வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிடவேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை என ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சிக் குடிக்கவேண்டும்.

நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது, இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணி வேர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து நாளைக்கு மூன்று முறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

கழுதைப் பால்

இந்த பாலை அருந்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. அப்படின்னா எதுக்கு இம்புட்டு சொல்லுகிறீர்கள்?

கழுதைப் பால் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கிறது. புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கு இது உதவுகிறது.

புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது. இந்த ஒரு பொருளே போதும் புற்று நோயை விரட்டியடிக்க.

கழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன. மேலும் கழுதைப் பால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பிரான்ஸ் நாட்டின் முதல் அரசரான பிரான்ஸிஸ் போரில் அதிருப்தியால் சோர்வடைந்த போது மருத்துவரின் ஆலோசனை பேரில் கழுதைப் பால் தான் குடித்து வந்தார். அது அவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. எனவே அறிவியல் பூர்வமாக கழுதைப் பால் ஒரு மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும்.

கல்லீரல் நச்சு:

இந்த பாலை ஆராய்ச்சி செய்த போது இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மற்ற காலை காட்டிலும் கழுதைப் பால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும்.

சரும பிரச்சினைகள்:

உங்களுக்கு பருக்கள் தொல்லை இருந்தால் அதற்கு கழுதைப் பால் சிறந்தது. உங்கள் சரும பிரச்சினைகளை துல்லியமாக போக்கி புதுப்பிக்க இது ஒரு சிறந்த மருந்து. அப்புறம் என்ன பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பரிசாக பெறலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்:

இந்த பால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நோய்களை எதிர்த்து போராடி அதை குணப்படுத்த உதவுகிறது.

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

இந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களுக்கு உதவுகிறது. இது மூளைக்கு சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

உடலுக்குத் தேவை

இளமை தங்க நெல்லிக்கனி
இதயம் வலுப்பட செம்பருத்திப் பூ
மூட்டு வலி முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு கற்பூரவல்லி ஓமவல்லி
நீரழிவு அரைக்கீரை, வில்வம்
வாய்ப்புண், குடல்புண் மணத்தக்காளிகீரை
உடல் பொன்னிறமாக பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல்
ரத்த அழுத்தம் துளசி, பசலைக்கீரை
ரத்த சோகை பீட்ரூட்
புற்று நோய் சீதா பழம்
மூளை வலிமை பப்பாளி பழம்
நீரிழிவு முள்ளங்கி
வாயுத் தொல்லை வெந்தயக் கீரை
மார்பு சளி, இருமல் சுண்டைக்காய், தூதுவளை
சளி, ஆஸ்துமா ஆடாதொடை.
ஞாபகசக்தி வல்லாரை கீரை
அஜீரணம் அன்னாசி பழம், புதினா
முடி நரை கல்யாண முருங்கை முள் முருங்கை
கண்பார்வை கூட கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
மஞ்சள் காமாலை கீழாநெல்லி
சிறுநீரக கல் வாழைத்தண்டு