Tag Archives: ஊமத்த இலைச்சாறு

சூலைப் புண்

கந்தகம் விராகனிடை ஐந்து, வெள்ளைக் குங்கிலியம் விரகனிடை பத்து, பொடித்து, பத்து குன்றியிடை வெள்ளீயத்தை உருக்கி அதில் இரசம் மூன்று விராகன் விட்டுக்கிண்டி எடுத்துப் பொடித்து, மேற்கூறிய இரண்டையும் சேர்த்து அரைத்து, ஆறு பங்கு செய்து மூன்று நாள் ஆறுவேளை புகை போடவும். பத்தியம் கொள்ளவும். நாங்கு நாட்களுக்கு ஒரு முறை தலை முழுகுதல் வேண்டும். இரண்டு மணி நேரம் தண்ணீரில் குளித்தல் நன்று.

இது வேறு;
காரீயம், இரசம் விராகன் முக்கால், துத்தம், துரிசு, வெள்ளைப் பாஷாணம், மிளகு, கடுகு விராகன் பதிமூன்று, கருங்குங்கிலியம் பணவிடை பதினாறு, அரிதாரம் பணவிடை ஐந்து, கவுரிபாஷாணம் விராகன் ஐந்து, மேற்படி காரீயத்தை உருக்கி இரசத்தை விட்டு முரித்து எடுத்து மற்றவைகளையும் சேர்த்து பருத்தி இலைச்சாறு, கையாந்தகரைச் சாறு, ஊமத்த இலைச்சாறு, வேலிப்பருத்தி இலைச்சாறு, இவைகளில் ஒவ்வொரு சாற்றிலும் ஒவ்வொரு நாழிகை அரைத்து ஒன்பது பாகமாகக்கொண்டு புகை போடவும்.
பத்தியம்:- பழஞ்சோறு, உப்பு, வெங்காயம், விளக்கெண்ணை. தண்ணீரில் முழுகவும்.
முறிவு:- வெல்லம்