முடக்கத்தான் கீரை சூப்

நன்றி –

சிம்பிள் & ஹெல்த்தி முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப், முடக்கத்தான் கீரை 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு 2 பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி 1, மிளகுத்தூள், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, முடக்கத்தான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, 4 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: வாயுத் தொல்லைக்கு அருமருந்து முடக்கத்தான் சூப். வாயுப் பொருமல், தொப்பை, அக்கி, வயிற்றுப்புழு, மசக்கை, பசி, ஏப்பம் மறைந்து உடலுக்கு தெம்பைக் கூட்டும். குடல் புழுக்கள் அழியும். மேல் வாய்வுப் பிடிப்பு, இடுப்பு வாய்வுப் பிடிப்பு விலகும். கை, கால் வலி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். முடக்குவாதம், பக்கவாதம் இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவந்தால் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
‪#‎முடக்கத்தான்சூப்‬

Vikatan EMagazine's photo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *