மருத்துவப் புது மொழி


* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்ணைக் குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

உடலுக்குத் தேவை

இளமை தங்க நெல்லிக்கனி
இதயம் வலுப்பட செம்பருத்திப் பூ
மூட்டு வலி முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு கற்பூரவல்லி ஓமவல்லி
நீரழிவு அரைக்கீரை, வில்வம்
வாய்ப்புண், குடல்புண் மணத்தக்காளிகீரை
உடல் பொன்னிறமாக பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல்
ரத்த அழுத்தம் துளசி, பசலைக்கீரை
ரத்த சோகை பீட்ரூட்
புற்று நோய் சீதா பழம்
மூளை வலிமை பப்பாளி பழம்
நீரிழிவு முள்ளங்கி
வாயுத் தொல்லை வெந்தயக் கீரை
மார்பு சளி, இருமல் சுண்டைக்காய், தூதுவளை
சளி, ஆஸ்துமா ஆடாதொடை.
ஞாபகசக்தி வல்லாரை கீரை
அஜீரணம் அன்னாசி பழம், புதினா
முடி நரை கல்யாண முருங்கை முள் முருங்கை
கண்பார்வை கூட கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
மஞ்சள் காமாலை கீழாநெல்லி
சிறுநீரக கல் வாழைத்தண்டு

இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி

நன்றி :  Veeram Velanja Madurai

“சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”

“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”

“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

சொரியாசிஸ்

நன்றி:  ரிலாக்ஸ் ப்ளீஸ்

சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம்
சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா. வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.

நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.

அஜீரணம்

நன்றி:  விஜயகுமார் சு shared Baskar Jayaraman‘s post.

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து !

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

இரைப்­பையின் கீழ்ப்­ப­கு­தியில் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள் பல்­வேறு மடிப்பு நிலையில் காணப்­படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்­கு­மாக சூழ்ந்திருக்கும்.

அந்த தசை­களின் உத­வியால், இரைப்­பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்­கப்­படும். இரைப்­பையில் இருந்து வெளி­யாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரை­யாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்­ச­மாக சிறு­கு­ட­லுக்குள் தள்­ளப்­படும். அங்­குதான் உணவு முற்­றிலும் ஜீர­ண­மா­கி­றது.

உணவில் இருக்கும் புரதம், சர்க்­கரை மாவு, நிணநீர் போன்­றவை சிறு­கு­ட­லினால் ஜீர­ணிக்­கப்­பட்டு, அவை குடல் உறிஞ்­சி­களால் ரத்­தத்­துக்குள் செலுத்­தப்­ப­டு­கின்­றன.

இதற்­கென்று கணை­யத்தில் தக்க அமி­லங்கள் சுரக்­கின்­றன. சிறு­கு­டலின் தொடக்­கத்தில் இட­து­பு­ற­மாக கணையம் இருக்­கி­றது. கல்­லீரல் பித்­தத்தை சுரக்­கி­றது.

கணை­யத்­துக்கு ரத்தம் செல்­லும்­போது, இச்­சு­ரப்பு கணை­யத்தை சுரக்கச் செய்­கி­றது. இந்த சுரப்­புகள் ‘என்சைம்’ எனப்­படும் வேதிப்­பொ­ரு­ளாகும்.

என்­சைம்­க­ளா­லேயே நம் உடலில் ஜீரணம் நடை­பெ­று­கி­றது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறு­கு­டலின் சவ்வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்­பதால், குட­லுக்கு பல­ம­டங்கு உணவு சத்­துக்கள் கிடைக்­கின்­றன.

இதில் செல்லும் உண­வா­னது ஜீர­ண­மாகி, கல்­லீ­ரலில் சத்­தான அமி­லங்­க­ளாக சேமிக்­கப்­ப­டு­கின்­றன.மிகு­தி­யாக உள்­ளவை, ரத்­தத்தின் கல­வை­யாக மற்ற உறுப்­பு­க­ளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்­துக்கள் நீங்­கிய திப்பிகள் பெருங்­கு­ட­லுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.

மலத்­துக்கு ஈரம் கொடுப்­ப­தற்கு வேண்­டிய அளவு போக, மிகு­தி­யான நீர்ப்­ப­குதி ரத்­தத்தில் நீக்­கப்­படும்.மேலும் கடி­ன­மான கழி­வுகள், பித்தம், பாக்­டீ­ரியா என்னும் நுண்­ணு­யிர்கள் எல்லாம் சளி­யோடு சேர்ந்து, பெருங்­கு­டலில் உள்ள தசை­களால் ஆச­னத்­துக்குள் தள்­ளப்­படும்.

இது, பொது­வாக நடை­பெறும் உணவு செரி­மா­ன­மாகும். மேற்­கூ­றிய உறுப்­பு­களில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரி­மானம் ஆவதில் குள­று­படி ஏற்­படும்.

ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உட­லுக்கு சக்தி தரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

நாக்கு ருசிக்­காக அடிக்­கடி சாப்­பி­டாமல், பசித்­தபின் உண­வ­ருந்த வேண்டும். அதி­க­ளவு உணவு, அடிக்­கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாச் சத்து உண­வு­களை அதிகம் சேர்ப்­பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உணவு­களை நிறைய சாப்­பி­டு­வதால் நமக்கு ஜீரண கோளா­றுகள் வரலாம்.

stomack

 

ஜீரண கோளாறை தடுப்­பது எப்­படி?

நம் அன்­றாட வாழ்க்­கையில் இத்­த­கைய இடர்­பா­டு­களை களைய, ஏரா­ள­மான கை வைத்­தி­யங்கள் உள்­ளன.

1. ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

2. திராட்டை பழத்தின் கொட்­டையை நீக்­கி­விட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்­கலாம். கொய்யா மரத்தின் கொழுந்து இலை­களைப் பறித்து சாப்­பி­டலாம்.

கொத்­த­மல்லி விதையை வறுத்து சாப்­பிட்டால், ஜீர­ண­மா­காமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்­ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முத­லி­ய­வற்றை 100 கிராம் எடுத்து, இவற்­றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்­துடன் கலந்து சாப்­பி­டலாம்.

ஒரு பங்கு வசம்­புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷா­ய­மாக வடி­கட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும்.

ஒரு துண்டு இஞ்­சியை நன்­றாக அரைத்து, ஒரு டம்ளர் எலு­மிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடி­கட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.

சுக்கு, இல­வங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்­றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!

‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழலாம்.

குறுந்தொட்டி வேர் தைலம்

நன்றி: ரசவாத சித்த மருத்துவன்

குறுந்தொட்டி வேர் கால்(1/4) துலாம் 875 gm,

கசகசா 2 பலம் (70 gm ),

தண்ணீர் 16 படி (தூணி = 2 பதக்கு ),

நல்லெண்ணெய் 1 litter .340 ml

ஒரு பாத்திரத்தில் குறுந் தொட்டி வேர்,875 கிராம்,நைத்து போட்டு ,16 படி நீர் ஊற்றி எட்டில் ஒன்றாக ( 2 படியாக )வற்ற காய்ச்சி வடிகட்டி,70 கிராம் கசகசாவை இந்த கசாயத்தால் அரைத்து,தைல பத்திரத்தில் 1 படி நல்லெண்ணெய் (1 litter 340 ml ) ஊற்றி கசகசா சேர்த்து அரைத்த கசாயத்தை (2 படி )கலந்து பதமுற காய்ச்சி வடிக்கவும்.

இத்தைலத்தை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து,வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

ஆண்கள் புதன்கிழமை,சனிகிழமையும்,

பெண்கள் செவ்வாய் கிழமை,வெள்ளிக்கிழமை,தைலம் தேய்க்கவும்.

ஒரு கரண்டி வீதம் காலை,மாலை,உள்ளுக்கும் சாப்பிடவும்.

80 வகை வாத நோய்கள் தீரும்.

இது அகஸ்தியர் முறை.